பர்துபை மற்றும் தேரா பகுதியில் கைகெட்டிய ( காலுக்கெட்டிய ) தூரத்தில் பலப்பல வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவைகளைப் போய் ஆர்வமுடன் பார்த்திருப்போம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே!
பொதுவாக நகரங்களில் மியூசியம் இருக்கும் பார்த்திருப்போம் ஆனால் மியூசியங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதோர் நகரம் துபை என்றால் அது மிகையில்லை எவ்வாறெனில் பர்துபை மியூசியம், நைஃப் போலீஸ் மியூசியம், முர்ஷித் பஜார் மியூசியம், அஹமதியா ஹெரிடேஜ் ஸ்கூல் மியூசியம், ஷிண்டாகா ஹெரிடேஜ் வில்லேஜ் என்ற பிரம்மாண்ட மியூசியத் தொடர் என ஆங்காங்கே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.
அனைத்தையும் இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...
முதலில் பர்துபை மியூசியம்.
இந்த அல் பஹீதி காவற்கோட்டையும் (AL FAHIDI FORT) அல் ஷிண்டாகா காவல் அரணும் அந்நியர்களின் கடல்வழி தாக்குதல்களிலிருந்து காப்பதற்காக CREEKஐ முன்னோக்கி கட்டப்பட்டது. இக்கோட்டைகளை சுற்றியும் பின்னும் தான் ஆரம்பகால குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரண்களின் பாதுகாப்பின் கீழ் தான் CREEKன் இருபுறமும் அன்றைய OLD SOUK மற்றும் முர்ஷித் பஜார் ஆகியவை உருவாகி இன்றும் அதன் பழமை மாற தோற்றத்துடன் துபை மாநகருக்கு பெருமையையும் மிகப்பெரும் பொருளாதாரத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது.
நம்ம ஊர் இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்ற வரலாற்று எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவை. ஏனென்றால் துபையின் வரலாற்றை புரிந்து கொள்ள உள்ளே செல்லும் நாம் இந்தியாவின் பெருமைமிகு வரலாற்றை ஒரளவு அறிந்து கொண்டு வரலாம். ஆங்காங்கே (இந்தியவுடனிருந்த கடல்வழி வணிக தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது). பண்டைய இந்தியாவும் இன்றைய இந்தியர்களும் இல்லை என்றால் துபை மாநகரம் இன்றும் ஒரு குக்கிராமமாகவே இருந்திருக்கும் அல்லது அதன் வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் தாமதப்பட்டிருக்கும்.
3 திர்ஹம் அனுமதிக்கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களே 3 திர்ஹம் வாங்கும் அளவிற்கு இங்கே என்ன இருக்கு? என்ற குழப்பத்தோடு மேல்மட்டத்தை மட்டும் பார்த்து உள்ளே சென்ற நமக்கு 10 நிமிடத்தில் வந்த வேலை முடிந்து விட்டதாகவே தோன்றியது ஆனால் இந்த மியூசியத்தை பார்வையிட 30 திர்ஹம் கூட தரலாம் என தோன்றியது நிலவறைக்குள் இறங்கிய பின்னரே, அதாங்க மண்ணுக்கு அடியில் ஒரு நவீன மின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து பிரமிக்க வைத்துள்ளனர்.
நிலவறை உள்நுழையும்போதே நம்மை வரவேற்குமுகமாக 1930 முதல் 2010 வரையான துபையின் ஒவ்வொரு 10 ஆண்டின் வளர்ச்சியை காணொளி ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் 1960ல் தான் துபை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் முதல் அடியை எடுத்து வைத்து இன்று உலகின் ஒரு அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாய் உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை அறியும் போது உள்ளங்கால் சில்லிடுகிறது.
'இன்றைய நவீன மின் சாதனங்களின் துணை கொண்டு மிக அழகாக நம்மை பண்டைய துபைக்குள் பயணிக்க வைத்து', மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கிய துபை மக்களின் ஆட்சி, மக்கள், வணிகம், போர், பயணம், வெளியுலக தொடர்புகள், வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் மீதான நிறுவுதல்கள், இந்தியாவுடனிருந்த கடல் வணிகத் தொடர்பு குறித்த குறிப்புகள், துபை சர்வதேச கடல் வணிகர்களின் இளைப்பாருமிடமாக மாறியதால் ஏற்பட்ட தொழில் புரட்சி போன்ற வரலாற்றை ஒலி ஒளி வடிவில் வழங்கி அசரடித்து விடுகிறார்கள்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் நேரில் பார்க்க விளைபவர்களின் ரசனைக்காக விட்டுவிட்டு புகைப்பட தோரணங்களாய் ரசிப்போம் வாருங்கள்...
அன்றும் இன்றும் நம் இந்தியாவை சார்ந்து தான் துபை, துபையை சார்ந்து தான் இந்தியா என்பதற்கான ஆதாரங்கள் அடுத்த தொகுப்பில் இன்ஷா அல்லாஹ். இங்கே மிகச்சிலவற்றை மட்டுமே புகைப்படங்களாய் தர முடிந்துள்ளது என்றாலும் இன்னும் காண வேண்டியவை, பதிய வேண்டியவை ஏராளம் உள்ளன.
இன்ஷா அல்லாஹ், ஷிண்டாகா அரண் மியூசியத்தின் விபரங்களுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருப்பது...
அதிரை அமீன்
சகோ. அமீன் காக்கா மற்றும் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு
ReplyDeleteஇது போன்ற சிலைகள் வடிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட *பெரும்பாவங்களில்* நின்றும் உள்ளது. இயல்பாகவே, சிலைகள், உருவச் சித்திரங்களை காணும்போது சரியான ஈமானுள்ள ஒரு முஸ்லிமின் உள்ளம் வெறுப்படையும். இது மாதிரியான சிலைகள் வணக்கத்திற்காக அல்லாமல் வெறும் கலையுணர்விற்காக படைக்கப்பட்டது என்றாலும் பெரும்பாவமே. இந்த சிலைகள் மக்களில் பலரை வழிகெடுத்துவிட்டது என்பதை மறக்க வேண்டாம்.
கலையுணர்வு, வரலாறு என்பதெல்லாம் மார்கம் அங்கீகரித்த வரையறைக்குள் தான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும், முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கும் நேர்வழியின் மீதும் தவ்ஹீதின் மீதும் நிலைத்திருக்கும் பாக்கியத்தை தருவானாக.
அன்புச்சகோதரர் அபு ஹாஜர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteதங்களுடைய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் அதே சமயம் நான் சிலைகளை பற்றி சிலாஹித்து பேசவில்லை மாறாக அவர்களுடைய பண்டைய வரலாற்று கலாச்சார தொடர்புகளை பதிவது மட்டுமே என் நோக்கம்.
அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு ஓர் வேண்டுகோள்
சகோதரர் சுட்டியது போல் சிலை வடிவங்களை கொண்டுள்ள படங்களை நீக்கி விடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.
சகோ. அமீன் காக்கா மற்றும் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை நிரப்பமாக தருவானாக. என்னையும் உங்களையும் நேர்வழியில் அதிகப்படுத்துவானாக.
அன்புச்சகோதரர்கள் அபூ ஹாஜர் அஹ்மது பிர்தவ்ஸ் அஹ்மது அஸ்ரப் மற்றும் கட்டுரை ஆசிரியர் அதிரை அமீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க பதிவில் பதிந்திருந்த சில புகைப்படங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteதுபாய் ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்லும் அளவிருக்கு இன்றைய நிலை இல்லை ...மாறாக மேற்கத்திய நாட்டின் கலா(விப)சாரத்தை மோகம் கொண்டு இருக்கிறார்கள் ...இஸ்லாத்தை மேலோங்க செய்யும் இந்த நாடு இஸ்லாத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது ..சகோதர் அதிரை அமீன் அவர்களுக்கு இது போன்ற பதிவை தவிர்க்கவும்
ReplyDeleteசிறந்த நினைவூட்டல் !
ReplyDeleteதுபாயில் வசித்த போது குடும்பத்தினருடன் சென்று மியூசியத்தை பார்த்தோம். சகோ. அமீனின் கட்டுரையை வாசித்ததும் மீண்டும் பார்க்க தோனுகிறது.
பதிவுக்கும் - பகிர்வுக்கும் நன்றி !
@Star News
ReplyDeleteதுபை உள்ளிட்ட அமீரகம் எந்த சந்தேகமும் இன்றி ஒரு முஸ்லிம் நாடு தான். ’முஸ்லிம்கள் பெரும்பாவம் செய்தால் காஃபிர்களாகிவிடுவர்’ என்பது கவாரிஜ்களின் நிலைப்பாடு. அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைப்பாடானது ‘ஒரு முஸ்லிம் பெரும் பாவத்தின் காரணமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறமாட்டான்’.
‘வளைகுடா நாடுகளை விட மேற்கத்திய நாடுகள் மேல்’ என்றெல்லாம் இன்று சிலரால் சொல்லப்படுவது அறியாமையின் உச்சம். இவர்கள் குஃப்ருக்கும் பெரும்பாவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவர்கள். ‘பாவம் செய்யும் முஸ்லிமிற்கும் நன்னடத்தையுள்ள (?!) காஃபிருக்கும்’ அல்லாஹ்வின் சட்டத்தில் உள்ள தீர்ப்பு என்னவென்பதை அறியாதவர்கள்.
மற்றபடி அமீரகத்திலும், எமிராத்திகளிடத்திலும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளது. தவ்ஹீத், ஸுன்னா, உடை, இஸ்லாமிய-அரபு பாரம்பரியம் மற்றும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளது. ஷைகுல் இஸ்லாம் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் அந்நஜ்தி அவர்களின் தூய தவ்ஹீத் சிந்தனைகளால் பல வகையில் அமீரகமும் பலனடைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். (வித்தியாசம் புரிய வேண்டுமானால் சூஃபிகளாலும், ரவாஃபிதி ஷியாக்களாலும் நிரம்பியுள்ள பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளை பார்த்துக் கொள்ளவும்)
அல்லாஹ் நமக்கும் முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கும் கிருபை செய்வானாக. நம்மையும் அவர்களையும் தூய மார்க்கத்தின் வரம்புகளை அறிந்து செயல்படும் கூட்டமாக ஆக்குவானாக.
துபாயில் இருப்போரும் துபைக்கு சுற்றுலா வருவோரும் துபாய் மியூசியம் அவசியம் பார்க்க வேண்டியவை.. நானும் பலமுறை சென்றிருக்கிறேன். நல்ல பகிர்வு நல்ல நினைவூட்டல். வாழ்த்துக்கள்.அதிரை அமீன்
ReplyDelete