பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேரணியில் கர்நாடக சங்கீத பாடகரும், கலைமாமணி விருது பெற்றவருமான கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சமூக பல்நோக்கு சேவைமைய ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தாமரங்கோட்டை கல்யாணசுந்தரம், மாற்றுத்திறனாளிகளின் மொழி பெயர்ப்பாளர் ராணி ஆகியோர் வாழ்த்தினர். பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமை தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு பெரியதெரு வழியாக மணிக்கூண்டு பகுதியில் பேரணி முடிவடைந்தது. தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பஹாத்முகமது, ருத்ரைய்யா, நகர செயலாளர் நாடிமுத்து, ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் அதிரை முகமது ராவுத்தர், பேராவூரணி கோபிமுருகன், மல்லிப்பட்டினம் செயலாளர் ஜலீல்முகைதீன், அதிராம்பட்டினம் நகர தலைவர் செந்தில்குமார், மாரியம்மாள், லியாக்கத்அலி, பாலசுப்பிரமணியன் ஜோசப்ஏசுதாஸ், அதிராம்பட்டினம் காது கேளாதோர் நல சங்கம் ஷாகுல்ஹமீது மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
மாற்றுத்திறனாளிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாம் இருக்கும் பணியை சார்ந்து தான் நம் வாழ்க்கை இருக்கிறது. அதற்காக மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது. நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற தைரியத்தில் இருக்க வேண்டும். அரசாங்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி கொடுக்க வேண்டும் என்றார்.
இதைதொடர்ந்து கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
மாற்றுத்திறனாளிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாம் இருக்கும் பணியை சார்ந்து தான் நம் வாழ்க்கை இருக்கிறது. அதற்காக மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது. நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற தைரியத்தில் இருக்க வேண்டும். அரசாங்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி கொடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.