வழக்கம் போல் இன்று காலை சேகர் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகை பையை கீழே வைத்துவிட்டு தனது கடையை திறந்திருக்கிறார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்திருந்த ஒரு கொள்ளையரும், முகமுடி அணியாமல் மற்றொருவரும் சேகர் வைத்திருந்த நகை பையை பிடுங்கியுள்ளனர். இதில் நகை பையை கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சேகர் கடுமையாக போராடியுள்ளார். இதில் சேகரை தாக்கியுள்ளனர். சேகரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த வர்த்தகர்கள் கொள்ளையரிடமிருந்து சேகரை மீட்க வந்துள்ளனர். இதில் சுதாரித்தகொண்ட கொள்ளையர்கள் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த அருவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நகை கடையில் கடந்த [ 19- 02-2014 ] அன்று நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில் ராதாகிருஷ்ணனுக்கு தலையில், கைககளில், முதுகில் பலத்த வெட்டு காயங்களும், சேகருக்கு கையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிரையில் கண் காணிப்பு காமிரா பொருத்தபட்டத்தை செய்தியாக நமதூர் ஊடகங்களில் வந்தது நாம் அனைவரும் வரவேற்றோம், பாராட்டினோம் இப்போது அதன் தேவை மிகவும் அவசியம் என்பதை புரியாதவர்களுக்கு புரிய வைத்திருக்கும், மேலும் பேபி ஜுவல்லரியில் நடக்கும் இரண்டாவது கொள்ளை சம்பவம் நல்ல வேலை சகோதரரின் உயிர் போகவில்லை முக்கியமாக பேபி ஜுவல்லரி போன்ற அனைத்து நகைகடைகளில் துல்லியமாக தெரிய கூடிய கேமிராவை பொறுத்த வேண்டும். காவல் துறை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும்.
ReplyDelete