.

Pages

Monday, December 1, 2014

அதிரையில் நடந்த அட்டுழியம் ! கொள்ளையர்கள் மீண்டும் வெறிச்செயல் !! [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஆப்பக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி பத்தர் இவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன் [ வயது 50 ], சேகர் [ வயது 45 ] அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரி தெருவில் கடந்த சில வருடங்களாக பேபி ஜுவல்லரி என்ற பெயரில் நகைகடை நடத்தி வருகின்றனர்.

வழக்கம் போல் இன்று காலை சேகர் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகை பையை கீழே வைத்துவிட்டு தனது கடையை திறந்திருக்கிறார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்திருந்த ஒரு கொள்ளையரும், முகமுடி அணியாமல் மற்றொருவரும் சேகர் வைத்திருந்த நகை பையை பிடுங்கியுள்ளனர். இதில் நகை பையை கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சேகர் கடுமையாக போராடியுள்ளார். இதில் சேகரை தாக்கியுள்ளனர். சேகரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த வர்த்தகர்கள் கொள்ளையரிடமிருந்து சேகரை மீட்க வந்துள்ளனர். இதில் சுதாரித்தகொண்ட கொள்ளையர்கள் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த அருவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நகை கடையில் கடந்த [ 19- 02-2014 ] அன்று நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில் ராதாகிருஷ்ணனுக்கு தலையில், கைககளில், முதுகில் பலத்த வெட்டு காயங்களும், சேகருக்கு கையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. நேற்று அதிரையில் கண் காணிப்பு காமிரா பொருத்தபட்டத்தை செய்தியாக நமதூர் ஊடகங்களில் வந்தது நாம் அனைவரும் வரவேற்றோம், பாராட்டினோம் இப்போது அதன் தேவை மிகவும் அவசியம் என்பதை புரியாதவர்களுக்கு புரிய வைத்திருக்கும், மேலும் பேபி ஜுவல்லரியில் நடக்கும் இரண்டாவது கொள்ளை சம்பவம் நல்ல வேலை சகோதரரின் உயிர் போகவில்லை முக்கியமாக பேபி ஜுவல்லரி போன்ற அனைத்து நகைகடைகளில் துல்லியமாக தெரிய கூடிய கேமிராவை பொறுத்த வேண்டும். காவல் துறை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.