.

Pages

Thursday, December 4, 2014

உடைந்த செடியன் குளத்தின் வடிகால் மண் மூடைகள் வைத்து சீரமைப்பு ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த வாரம் சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக வந்த ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் தினமும் ஏராளமானோர் குளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக செடியன் குளத்தில் காணப்படும் வடிகாலின் ஒரு பகுதி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் குடியிருப்பு, பிராதான சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு செல்வோரும், வாக்கிங் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செடியன் குளத்தின் தண்ணீர் பிலால் நகர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இப்பகுதியின் ஆர்வலர்கள் எச்சரித்தனர் மேலும் பல்வேறு தரப்பின் கடின முயற்சியின் கீழ் கொண்டு வந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் கூறினார்கள்.

இந்நிலையில் இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பில் செடியன் குளத்தின் வடிகாலிலிருந்து கசியும் நீரை மண் மூடைகள் வைத்து சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப் உடனிருந்து கவனித்து வருகிறார்.

8 comments:

  1. மக்களின் கவுன்சிலர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. மக்களின் கவுன்சிலர் லதிப் இப்ப தான் கலத்துக்கு வந்து கிறாரு

    ReplyDelete
    Replies
    1. இப்பத்தான் இல்லை எப்போதுமே இருப்பார்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Mr star news , he always in the field, your certificate no need for him, he got enough,

      Delete
  3. Nazeer Brother Mobile also New see ......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.