உள்ளூர் மார்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்படும். இதற்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட தேசப்பொடி, காரைப்பொடி, வாளைமீன், கொடுவா மீன், முரல் மீன், திருக்கை மீன், தாளன் சுறா, இறால், சிங்கி இறால் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் காரைக்கால் துறைமுக பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட பண்ணா மீன்கள் கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். கிலோ ₹ 150 க்கு விற்கப்பட்டது. விலை மலிவாக இருப்பதால் மீன் பிரியர்கள் போட்டிபோட்டு கொண்டு வாங்கிச் செல்கின்றனர். விரைவாக விற்பதுடன், நிறைவான லாபம் கிடைப்பதால் மீன் வியாபாரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பண்ணா பண்ணாதான், பார்த்து வாங்க பலர் இல்லை, விலையைக் கேட்டால் வெறிக்குது மனசு, ஆனால் நாக்கு மட்டும் ஒத்துழைக்க மாட்டேங்குது.
கூறு போடாமல், எடை போட்டு விற்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com