அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு, வாய்க்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பை கூளங்கள் கடந்த சில நாட்களாக அப்புறப்படுத்தப்படாததால் ஆங்காங்கே குமிந்து காணப்படுகிறது. இவற்றை வீதியில் சுற்றி திரியும் மாடுகள் கிளறுவதால் துர் நாற்றம் வீசுவதாகவும், குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் எடுக்கப்பட்ட குப்பைகளின் படங்கள்...







எங்களால் மட்டும் தான் போட முடியும்
ReplyDeleteநாங்கள் ஊர், தெரு சாதனை படைத்துள்ளோம்.
ஹி ஹி ஹி .....,,,
இலவசங்களை கொடுத்து முட்டாளுக்கும் அரசு கொஞ்சம் clean India திட்டத்தை வித்தியாசமான முறையில் தமிழக அரசு செயல் படுத்துமா? கேஸ் connection வைத்துருப்பவர்களுக்கு கண்டிப்பாக பேங்க் அக்கௌன்ட் இருக்கும். இந்த வீணாப்போன குப்பைக்கு மங்கும் குப்பை ஒரு தொகையும் மங்கா குப்பைக்கு மற்றொரு தொகையும் நிர்ணயித்து வீடுகளில் துப்புரவாளர் வசூலிப்பார் அதன் மானியம் உங்கள் அக்கௌண்டில் போடப்படும் என்று அறிவித்தால் அப்புறம் பாருங்க எப்படி தெரு இருக்குமுன்னு...... துப்புரவாளர் பிறகு துப்பு ....... வரவு ஆகிவிடுவார்.
ReplyDeleteகுப்பை ஒழிக்க நல்ல யோசனை தானே ! அரசு பரிசிளிக்குமா ?