டெல்லி சுல்தான்கள் ஆட்சி முடிவுற்ற பிறகு அதாவது பானிபட் எனும் இடத்தில் முகலாய மன்னர் பாபரும், இப்ராஹீம் லோடிக்கும் இடையே ஏற்பட்ட போரில் லோடி கொல்லப்படுகிறார். அன்று முதல் முகலாய முதல் மன்னரான பாபர் இந்திய தேசத்தின் ஆட்சியை கைப்பற்றுகிறார். சுமார் 800 ஆண்டு காலம் முகலாயர்கள் டெல்லியை மையமாக கொண்டு ஆட்சி செய்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பிரமாண்டமான கோட்டைகளை காணும் போது இவர்கள் மிகச்சிறந்த கட்டட கலை வல்லூனர்களாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடியும். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி என எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறையேனும் காண வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கிறது.
துபாயில் பணி புரிந்து வரும் நான். சமீபத்தில் விடுமுறையில் தாயகம் திரும்பினேன். அப்போது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டேன். சுற்றுலா செல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் இருந்து வந்தாலும், டெல்லி சென்று அங்குள்ள அழகிய பகுதிகளை காண வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது.
தமிழகத்தில் இருந்து டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் இரயில் அல்லது விமானம் மூலம் செல்வது சிறந்ததாக இருக்கும். எனக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு அமைந்தது. சென்னையிலிருந்து சுமார் 3 மணி நேரம் பயணம்...




//டெல்லியில் உள்ள பிரமாண்டமான (கொட்டைகளை) காணும் போது//
ReplyDeleteகாக்கா வாசகத்தை திருத்தம் செய்யவும் ப பப்ளிக் பப்ளிக் . . . . .
Nice pic Super g Super g ...
ReplyDeleteசென்னையிலிருந்து சுமார் 3 மணி நேரம் பயணம்... அட
ReplyDeleteசுற்றலா தொடர் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் போலும். டெல்லி இமாமை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அத பற்றி கொஞ்சம் விவரமா சொல்லுங்க நூவன்னா காக்கா.
காங்கிரஸ் தொண்டன் (இப்பவும் தான் ) கட்சி விஷயமா முக்கிய புள்ளிகளை பார்த்தீர்களா ,,,,, சொல்லுங்க. இப்படி கேள்வியா தொடுத்து எழுதலாம்.