.

Pages

Monday, July 24, 2017

இலங்கையில் மீண்டும் 2 யானைகள் கடலிலிருந்து உயிருடன் மீட்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 24
கடந்த 2 வாரங்களுக்கு முன் தான் சுமார் கடலில் 8 கி.மீ தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட யானை ஒன்று மீட்கப்பட்டது. ஆழமில்லாத உப்பங்கழி (Swallow lagoon) பகுதிகளிலிருந்து தற்போது மீண்டும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட 2 யானைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் வாழும் திரிகோணமலை பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டிருந்த 2 யானைகளை இலங்கை கடற்படையின் ரோந்துப் படகுகள், நீச்சல் வீரர்கள் குழுவினர் ஆகியோர் ஒன்றிணைந்து தடிமனான கயிறுகளை கொண்டு மீட்டு திரிகோணமலை காட்டிற்குள் விட்டனர்.

திரிகோணமலை கடற்பகுதியில் நீலம் மற்றும் ஸ்பேர்ம் வகைத் திமிங்கிலங்கள் (Blue & Sperm Whales) அதிக அளவில் காணப்படும் மேலும் இரண்டாம் உலகப் போரின் போது கூட்டுப்படைகளின் மறைமுக கடற்படைத் தளமாகவும் திரிகோணமலை செயல்பட்டுவந்தது கூடுதல் தகவல்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.