![]() |
கோப்புப்படம்: நாகூர் அணி |
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 23 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 27ந் தேதி தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், காயல்பட்டினம், திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கரம்பயம், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி உள்ளிட்ட 26 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் கெளதியா நாகூர், நேதாஜி செவன்ஸ் தஞ்சாவூர் அணிகள் மோத உள்ளனர். ஆட்டம் சரியாக 5 மணிக்கு தொடங்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.