.

Pages

Monday, July 31, 2017

கத்தார் ஹஜ் பயணிகளை தடுப்பதாக வெளியான குற்றச்சாட்டிற்கு சவுதி மறுப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 31
கத்தார் மீதான சவுதி உட்பட சில அரபு நாடுகளின் தடையும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் பஞ்சாயத்துக்களும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் கத்தாரிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகளை தடுப்பதாக கத்தார் எழுப்பிய குற்றச்சாட்டை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வருடந்தோறும் சுமார் 1600 கத்தார் பிரஜைகளும் சுமார் 400 கத்தார்வாழ் வெளிநாட்டு பிரஜைகளும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டும் அதேயளவு ஹஜ் பயணிகள் வருகை தர எந்தவித் தடையுமில்லை என்றும் ஆனால் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து சவுதி ஹஜ், உம்ரா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த விமான சேவையையும் பயன்படுத்தி வரலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து கத்தார் மற்றும் சவுதிக்கு இடையிலான தரைவழி போக்குவரத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கத்தார் நாட்டு ரியால்கள் வழமைபோல் சவுதியில் செல்லும் என்றும் ஹஜ் பயணிகள் கத்தார் ரியால்களை தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி வருகை தந்த கத்தார் நாட்டு ஹஜ் பயணிகள் பிற நாட்டு ஹஜ் பயணிகளைப் போலவே மனமுவந்து வரவேற்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.