அதிரை நியூஸ்: ஜூலை 18
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு 1970 ஆம் ஆண்டு முதல் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தை 'மோரோ நேஷனல் லிபரேஷன் பிரான்ட்' (Moro National Liberation Front - MNLF) என்ற குழுவும் அதிலிருந்து பிரிந்த மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் பிரான்ட்' (Moro Islamic Liberation Front - MILF) என்ற போட்டிக்குழுவும் மேற்கொண்டு வந்தன.
மேலும் கடந்த மே மாதம் முதல் மாராவி பகுதியில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதக் குழுக்களும், அரசுப்படையினரும் மேற்கொண்டனர். இந்நிலையில் உலகின் அச்சுறுத்தலான ஐ.எஸ் என்ற பயங்கரவாதக் குழுக்களுடன் மோரோ குழுக்கள் இணையாதிருக்கவும், மிண்டானோ பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்டே (Duerte) முடக்கிவிட்டதை தொடர்ந்து சுயாட்சிக்கான (Self Rule) உடன்படிக்கை அரசுக்கும் 2 மோரோ குழுக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் 1 வருட காலத்திற்குள் சட்டமாக்கப்பட்டு உரிய அங்கீகாரத்தை பெறும். இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு இதேபோல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்று அற்ப ஆயுளில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் நடைபெற்று வந்த இருதரப்பு ஆயுத சண்டையால் சுமார் 1 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும். இங்கு 1970 ஆம் ஆண்டு முதல் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தை 'மோரோ நேஷனல் லிபரேஷன் பிரான்ட்' (Moro National Liberation Front - MNLF) என்ற குழுவும் அதிலிருந்து பிரிந்த மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் பிரான்ட்' (Moro Islamic Liberation Front - MILF) என்ற போட்டிக்குழுவும் மேற்கொண்டு வந்தன.
மேலும் கடந்த மே மாதம் முதல் மாராவி பகுதியில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதக் குழுக்களும், அரசுப்படையினரும் மேற்கொண்டனர். இந்நிலையில் உலகின் அச்சுறுத்தலான ஐ.எஸ் என்ற பயங்கரவாதக் குழுக்களுடன் மோரோ குழுக்கள் இணையாதிருக்கவும், மிண்டானோ பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்டே (Duerte) முடக்கிவிட்டதை தொடர்ந்து சுயாட்சிக்கான (Self Rule) உடன்படிக்கை அரசுக்கும் 2 மோரோ குழுக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் 1 வருட காலத்திற்குள் சட்டமாக்கப்பட்டு உரிய அங்கீகாரத்தை பெறும். இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு இதேபோல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்று அற்ப ஆயுளில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் நடைபெற்று வந்த இருதரப்பு ஆயுத சண்டையால் சுமார் 1 லட்சம் பேர் மரணித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.