பட்டுக்கோட்டை, ஜூலை 23
ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி, ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் / டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் தொடக்க விழா பட்டுக்கோட்டை கரிக்காடு எஸ்.எம்.எஸ் அவென்யூ வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி இயக்குநர் டாக்டர் எஸ். முகம்மது அஸ்லம் தலைமை வகித்தார்.
விழாவில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜே. லோகநாதன் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில்;
மாணவ, மாணவிகள் உயர்ந்த இலக்கை அடைய திட்டமிடல் அவசியம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு விடா முயற்சி, கடின உழைப்புத்திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். மேலும் பயிற்சி மையத்தில் புதிதாக இணைந்த மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி ரேடியண்ட் அகதெமி அமைப்பாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ், சீடு டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் இதயத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடக்கத்தில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் முஹம்மது அப்துல் காதர் வரவேற்றார். நிகழ்ச்சியினை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி தொகுத்தார். ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி ஒருங்கிணைப்பாளர் சம்சுல் ஹுதா நன்றி கூறினார்.
விழாவில், காதிர் முகைதீன் கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஆசிரியர்கள். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி, ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் / டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் தொடக்க விழா பட்டுக்கோட்டை கரிக்காடு எஸ்.எம்.எஸ் அவென்யூ வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி இயக்குநர் டாக்டர் எஸ். முகம்மது அஸ்லம் தலைமை வகித்தார்.
விழாவில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜே. லோகநாதன் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில்;
மாணவ, மாணவிகள் உயர்ந்த இலக்கை அடைய திட்டமிடல் அவசியம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு விடா முயற்சி, கடின உழைப்புத்திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். மேலும் பயிற்சி மையத்தில் புதிதாக இணைந்த மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி ரேடியண்ட் அகதெமி அமைப்பாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ், சீடு டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் இதயத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடக்கத்தில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் முஹம்மது அப்துல் காதர் வரவேற்றார். நிகழ்ச்சியினை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி தொகுத்தார். ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி ஒருங்கிணைப்பாளர் சம்சுல் ஹுதா நன்றி கூறினார்.
விழாவில், காதிர் முகைதீன் கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஆசிரியர்கள். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.