.

Pages

Thursday, July 20, 2017

அதிரையில் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு, நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம், மாவட்ட ரம்ஜான் விழா !

அதிராம்பட்டினம், ஜூலை 20
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2017-2018 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு, இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் மற்றும் மாவட்ட ரம்ஜான் விழா லாவண்யா திருமண மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். முகம்மது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், லயன்ஸ் சங்கம் அதிராம்பட்டினம் தலைவராக எஸ்.எம். முகம்மது முகைதீன், செயலராக அப்துல் ரஹ்மான், பொருளாளராக எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் பொறுப்பேற்றனர்.

லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.டி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில், ரூ. 15 ஆயிரம் மதிப்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள், புற்றுநோயால் பாதிப்படைந்த சிறுவனுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது.

லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், மாவட்ட அமைச்சரவை நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், வட்டாரத் தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

பணியேற்பு விழாவிற்கு லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்றார். லயன்ஸ் சங்கச் செயலர் முத்துகிருஷ்ணன் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவைத் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார். முடிவில் செயலர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

இதையடுத்து, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் தீன் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்திய இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகம்மது முகைதீன் தலைமை வகித்தார். தீன் மருத்துவ ஆய்வக நிறுவனர் சம்சுதீன், லயன்ஸ் சங்கச் செயலர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முகாமை மாவட்டத் தலைவர் க.பழனியப்பன் தொடங்கி வைத்தார். முகாமில் தீன் மருத்துவ ஆய்வகக் குழுவினர் பயனாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோய் அறிகுறியை கண்டறிந்து கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற, லயன்ஸ் சங்கம் மாவட்ட ரம்ஜான் விழாவிற்கு, மாவட்டத் தலைவர் எம். நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். விழாவை மாவட்ட ஆளுநர் எஸ். வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை ஆற்றாங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி ஏ.அப்துல் ரஹ்மான் மன்பஈ, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு ரம்ஜான் பேருரை நிகழ்த்தினார்கள்.

விழா முடிவில், லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகம்மது முகைதீன் நன்றி கூறினார். விழாவில் லயன்ஸ் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், சேவை அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. அதிரை லயன்ஸ் சார்பில்... விழாவில், ரூ. 15 ஆயிரம் மதிப்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள், புற்றுநோயால் பாதிப்படைந்த சிறுவனுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது...ஒவ்வொரு ஆண்டு அறிக்கையில் இப்படி தான் இருக்கும்போல பரவாயில்லை.. அதென்ன "மாவட்ட ரம்ஜான் விழா " இதன் செயல்பாடு என்னன்னு சொல்லாம ஒரு விழா அதற்க்கு ஒரு தலைமை... கொஞ்சம் பார்த்தீங்கன்னா அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்டவர்கள் தான் மீண்டும் மீண்டும் பதவி வழங்கப்படுகிறது அதிரையில் வேற யாரும் இல்லையா அல்லது ஒரு சம்பிரதாயமா? இவ்வமைப்பின் சார்பாக அதிரையில் ஏதாவது ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி ... ம்ஹும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.