அதிரை நியூஸ்: ஜூலை 27
சவுதி அரேபியாவில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சவுதியில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டது மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையுடன் அதுவும் நிறைவடைந்தது.
நீட்டிக்கப்பட்ட 4 மாத பொதுமன்னிப்புக் காலம் இனியும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் கடும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீண்டும் சவுதிக்குள் வர தடை செய்யப்படுவார்கள் என்றும் சவுதி ஜவாஜத் துறையின் பொது மேலாண்மை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்துள்ளார்.
இந்த 4 மாத பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 6 லட்சம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேறியுள்ளதாகவும், சுமார் 15,000 பேர் மீண்டும் முறையான ஆவணங்களுடன் திரும்பி வந்துள்ளதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் வெளியேறாமல் இருப்பதாகவும் அவர்களும் பிடிக்கப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சவுதியில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டது மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையுடன் அதுவும் நிறைவடைந்தது.
நீட்டிக்கப்பட்ட 4 மாத பொதுமன்னிப்புக் காலம் இனியும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் கடும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீண்டும் சவுதிக்குள் வர தடை செய்யப்படுவார்கள் என்றும் சவுதி ஜவாஜத் துறையின் பொது மேலாண்மை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்துள்ளார்.
இந்த 4 மாத பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 6 லட்சம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேறியுள்ளதாகவும், சுமார் 15,000 பேர் மீண்டும் முறையான ஆவணங்களுடன் திரும்பி வந்துள்ளதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் வெளியேறாமல் இருப்பதாகவும் அவர்களும் பிடிக்கப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.