.

Pages

Friday, July 28, 2017

புனித மக்கா அருகே 'அல் பைஸாலியா' எனும் புதிய ஸ்மார்ட் மாநகரம் !

அதிரை நியூஸ்: ஜூலை 28
புனித மக்கா மற்றும் ஜித்தாவில் காணப்படும் ஜன மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் 'அல் பைஸாலியா' (Al Faisaliah) எனும் புதிய ஸ்மார்ட் துணை நகரம் சுமார் 2,450 சதுர கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலைய வசதியுடன் அமைக்கப்படுகிறது.

இந்த புதிய நகரில் 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 6.5 மில்லியன் மக்கள் தங்கும் வசதியுடன் சுமார் 995,000 வீட்டுத் தொகுதிகள் கட்டப்படும். சுகாதாரம், கல்வி, தொழிற்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளில் சுமார் 1 மில்லியன் வேலைவாயப்புக்கள் உருவாக்கப்படும். இந்த துணை நகரம் புனித மக்கா மாநகரின் நீட்சியாகவே விளங்கும்.

இந்த துணை நகரில் குடியிருப்பு பகுதிகளுடன், வர்த்தக மையங்கள், கலாச்சார மையங்கள், சுகாதார மையங்கள், கல்விசார் மையங்கள், சேவைத்துறைகள், அரசு அலுவலகங்கள், விமான நிலையம், ரெயில், மெட்ரோ, டிராம், பஸ் வசதிகளுடன் மாற்றத்தக்க எரிசக்தியில் தயாராகும் மின்சாரம் மற்றும் நிலையான விவசாய வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும், ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சிறப்பு அலுவலகம், இஸ்லாமிய சட்ட (பிக்ஹ்) மையம், தூதரக அலுவலகங்கள், வணிக மண்டலங்கள், கடைவீதிகள், கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவின் புத்ரா ஜெயா ஆகியவற்றை முன்மாதிரியாக கொண்டு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கத் தேவையான கட்டமைப்புகளுடன் 9.5 கிகாவாட்ஸ் சக்தி மாற்றத்தக்க மின்சாரமும் (Gigawatts form Renewable energy) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஹஜ் உம்ரா பயணிகள் உட்பட வருடத்திற்கு சுமார் 10 மில்லியன் சுற்றுலாவாசிகளையும் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.