அதிரை நியூஸ்: ஜூலை 31
பிரான்ஸ் நாட்டு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் 2 ஏர் இந்திய விமானங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பயணம் செய்த இந்திய பெண் பயணியின் கை எனக் கருதப்படும் சிதிலமடையாத உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு நடந்ததோர் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகள் உயிரிழந்தனர். அதே பகுதியில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு ஏர் இந்தியா போயிங் 707 ரக விமான விபத்தில் 117 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த இரு விமான விபத்துக்களும் மாண்ட் பிளாங்க் பகுதியில் நடைபெற்றது.
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் 4 எஞ்சினில் 1 எஞ்சினும் இந்தக் கையுடன் கிடைத்துள்ளது. வேறு சில உடற்பாகங்களும் கிடைத்துள்ள போதிலும் அவை இந்த கைக்குரிய இந்திய பெண் பயணியுடையது அல்ல என இவற்றை கண்டுபிடித்த ஆய்வாளர் டேனியல் ரோச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விரு விமான விபத்துக்களில், இந்தக் கை 1966 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து (மும்பை) நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பெண்ணுடையதாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவீஸ் நாட்டு பகுதியில் உள்ள இதே ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் கடந்த 10 தினங்களுக்கு முன் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதிகள் இருவரின் உடல் கெடாமல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பிரான்ஸ் நாட்டு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் 2 ஏர் இந்திய விமானங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பயணம் செய்த இந்திய பெண் பயணியின் கை எனக் கருதப்படும் சிதிலமடையாத உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு நடந்ததோர் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகள் உயிரிழந்தனர். அதே பகுதியில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு ஏர் இந்தியா போயிங் 707 ரக விமான விபத்தில் 117 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த இரு விமான விபத்துக்களும் மாண்ட் பிளாங்க் பகுதியில் நடைபெற்றது.
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் 4 எஞ்சினில் 1 எஞ்சினும் இந்தக் கையுடன் கிடைத்துள்ளது. வேறு சில உடற்பாகங்களும் கிடைத்துள்ள போதிலும் அவை இந்த கைக்குரிய இந்திய பெண் பயணியுடையது அல்ல என இவற்றை கண்டுபிடித்த ஆய்வாளர் டேனியல் ரோச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விரு விமான விபத்துக்களில், இந்தக் கை 1966 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து (மும்பை) நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பெண்ணுடையதாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவீஸ் நாட்டு பகுதியில் உள்ள இதே ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் கடந்த 10 தினங்களுக்கு முன் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதிகள் இருவரின் உடல் கெடாமல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.