.

Pages

Friday, July 28, 2017

அதிரையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 28
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல்படி, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அறிவுறுத்தலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சி உறுப்பினர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அதிரை பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் ஏ. துரைமாணிக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்து பேசினர்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதிராம்பட்டினம் பகுதி வார்டு வாரியாகச் சென்று புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து அதன் விவரங்களை மாவட்ட கட்சி அலுவலகத்தில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் அதிரை பாருக், ஏ கோவிந்தன், நாராயண சாமி, கார்த்திகேயன், பி.திலகராஜ் கட்டபொம்மன், தாவூது பாட்சா, தெளலத் பாட்சா என்கிற சேக்தாவூது, சம்சுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.