தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் 'கம்யூட்டர்' புகாரி. தமிழ் இலக்கியம் மீது தீராத பற்றுகொண்டவர். இவரது இலக்கியச் சேவையை பாராட்டி மலேசியா அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் படித்து பயன்பெற வேண்டி 'வருங்காலத் தூண்கள்' என்ற விழிப்புணர்வு நூலை எழுதி இருக்கிறார். இந்நூலில் மலேசியா அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வாழ்த்துரை வழங்கி கெளரவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் வெளியாகும் பிரபல தமிழ் நாளிதழ்களில் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு கருத்தரங்க, பேச்சரங்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.
இந்நிலையில், இந்நூலின் வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மலேசியா இந்தியன் காங்கிரஸ் முஸ்லீம் சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ செனட்டர் செய்யது இப்ராகிம் தலைமை வகித்து, நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக, மலேசியா இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத் தலைவர் எஸ்.பி மணிவாசகம் வரவேற்றுப் பேசினார். விழாவில் நூல் ஆசிரியர் அதிரை கம்ப்யூட்டர் புகாரி ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteமணிச்சுடர் நாளிதழின் தஞ்சை தெற்கு மாவட்ட நிருபர், சாவன்னா
இலக்கிய - மொழிப்பற்று, பன்முக தன்மைகொண்ட நம் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமைதான்., கப்யூட்டர் புகாரின் படைப்புகள் மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கு., சமுதாய சிந்தனையோடு தொடர்ந்து படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள் .
ReplyDelete