.

Pages

Saturday, July 29, 2017

கில்லாடி கடன்காரி !

அதிரை நியூஸ்: ஜூலை 29
'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்றான் அருணாச்சல கவிராயர் ஆனால் மாற்றாக சீனாவில் கடன்கொடுத்தவர்கள் கலங்கிய செய்தி இது.

மத்திய சீனாவின் ஊஹான் நகரைச் சேர்ந்த 59 வயது பெண் ஜூ நஜூவான் என்பவர் வங்கிகளில் வாங்கிய கடன் 25 மில்லியன் யுவான் (3.71 மில்லியன் டாலர்) பணத்தை திரும்பக் கட்டும்படி சீன நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் என்ன? நாங்க அதுக்கும் மேலே என யோசித்த அந்தப் பெண் பிறரிடம் வாங்கிய கிரடிட் கார்டுகளை உபயோகித்து தனது முகத்தை 30 வயது பெண் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். பலருடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி சீனாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இறுதியாக தென்கிழக்கு சீனாவின் ஸென்ஷென் நகரில் வந்து தங்கிவிட்டார்.

வலைவீசி தேடிய போலீஸ் ஒருவழியாக அந்த பெண்ணை நெருங்கும் போது தலைசுற்றிப் போனது போலீஸ் 59 வயது பாட்டியை தேடிப்போனால் அங்கிருப்பதோ 30 வயது பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக வடிவை மாற்றிக் கொண்ட குட்டு உடைபட தற்போது கம்பி எண்ணுகிறார் அந்த கில்லாடி கடன்காரி, மல்லையாவின் கான்டக்ட் கிடைக்கவில்லையா அல்லது கேள்விப்படவில்லையா எனத் தெரியவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.