.

Pages

Sunday, July 30, 2017

அதிரையில் வீடு தேடிச்சென்று பாலகர்களுக்கு குர்ஆன் கற்பிக்கும் தலைமை இமாம் !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேக் அலாவுதீன் (வயது 74). பிலால் ( ரலி ) பள்ளிவாசல் தலைமை இமாம். இப்பள்ளிவாசலில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தொழுகை நடத்தி வருகிறார். இப்பள்ளியில் அதிகாலை இவர் எழுப்பும் கணீர் குரலின் பாங்கொலியால் உறங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் சுப்ஹ் தொழுகைக்கு பள்ளிவாசல் பக்கம் அழைப்பவர். மழை, குளீர், காற்று, இருட்டு என எவ்வித சீதோசன நிலை ஏற்பட்டாலும் தொய்வில்லாமல் பணியாற்றுபவர்.

சரி விசயத்திற்கு வருவோம்...
பிலால் ( ரலி ) பள்ளிவாசல் அமைந்துள்ள பிலால் நகர் பகுதியில் வசிக்கும் இளம் சிறார்களுக்கு அடிப்படை இஸ்லாமிய மார்க்கக் கல்வியான குர்ஆன் கற்பித்தல், அரபி மொழி எழுத்துப்பயிற்சி, சூரா மனனம், நல்லொழுக்கப்பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார். முதிய வயதில் வீடு தேடிச் சென்று கணீர் குரலில் இளம் சிறார்களுக்கு குர்ஆன் கற்பிக்கும் இவரது சேவைப் பணி பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுகிறது.

இவரது சேவைப்பணி தொய்வில்லாமல் தொடர்ந்திட இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் என்றென்றும் வழங்குவானாக...

அபூ அஜீம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.