.

Pages

Tuesday, July 18, 2017

அதிரையில் 2 மாத குழந்தைக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 18
தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதரக் குழுவினர் தீவிரம்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்தவர் ஜஹபருல்லா. இவரது 2 மாத ஆண் குழந்தைக்கு கடந்த ஒரு வார காலமாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணி அறிவுரை பேரில், வட்டார மருத்துவ அலுவலர் கு. அறிவழகன் தலைமையில், இளநிலை பூச்சியியல் வல்லுநர், சுகாதார ஆய்வாளர், அதிரை பேரூராட்சி இளநிலை உதவியாளர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய சுகாதாரக் குழுவினர், டெங்கு பாதிப்புக்குள்ளான வெற்றிலைக்காரத் தெரு பகுதியில் முகாமிட்டு, காய்ச்சல் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அங்கு வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளில் 'அபேட்' மருந்து தெளித்தல், புகை அடித்தல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட கொசுப் புழு ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.