அதிரை நியூஸ்: ஜூலை 15
இன்றைய நவீன காலத்தில் ஏசி எனும் குளுகுளு வசதி இல்லாத வாழ்க்கை அரபு நாடுகளில் கனவிலும் நினைத்தப் பார்க்க இயலாத ஒன்று. மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவிலும் ஏசி அவசியம் என்பதையும் கடந்து அத்தியாவசியம் எனும் நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளோம் ஆனால் இவை நல்லதில்லை என அமீரகத்தில் பணிபுரியும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள், வர்த்தக மையங்கள் என எங்கெங்கும் ஏசியில் தொடர்ந்து இருக்கும் நிலை பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். முறையாக பாராமரிக்கப்படாத ஏசிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அதே கட்டிடத்தில் உள்ள பிற ஏசி மெஷின்களையும் தொற்றி பிறருக்கும் நோய்களை பரப்ப வல்லவை. குறிப்பாக, முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் பீடித்துள்ளவர்களை மேலும் பாதிக்கும் என்றும் இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசியில் அதிகம் இருப்பதைவிட வெப்பநிலையில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.
ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாச நோய் உண்டாவதற்கும், மூச்சுத்திணறல், ஜலதோஷம், சளித்தொல்லை, இருமல் போன்றவை பரவுவதற்கும் ஏசிக்கள் காரணமாக இருக்கின்றன என்பதால் நோய்களை தவிர்க்க விரும்புவோர் அடிக்கடி தங்களுடைய ஏசி மெஷின்களை சுத்தப்படுத்தி பாராமரித்து வர வேண்டும்.
அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும் வெளிப்புற வெப்ப நிலையிலும், புல்தரைகளிலும் அதிக நேரத்தை செலவிட முன்வர வேண்டும். அதேபோல் வசிப்பிடங்களில் வெப்பநிலையை சுமார் 20 முதல் 25 டிகிரி செல்ஷியஸூக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 20 டிகிரி செல்ஷியஸூக்கு குறைவான தட்பவெப்பம் பல்வேறு தொற்று நோய்களை கடத்த வல்லவை என்று துபை யூனிவர்ஸல் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஜிம்மி ஜோசப் அவர்களும் புர்ஜீல் மருத்துவமனைளை சார்ந்த டாக்டர் திரிலோக் சந்த் அவர்களும் எச்சரித்துள்ளனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
இன்றைய நவீன காலத்தில் ஏசி எனும் குளுகுளு வசதி இல்லாத வாழ்க்கை அரபு நாடுகளில் கனவிலும் நினைத்தப் பார்க்க இயலாத ஒன்று. மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவிலும் ஏசி அவசியம் என்பதையும் கடந்து அத்தியாவசியம் எனும் நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளோம் ஆனால் இவை நல்லதில்லை என அமீரகத்தில் பணிபுரியும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள், வர்த்தக மையங்கள் என எங்கெங்கும் ஏசியில் தொடர்ந்து இருக்கும் நிலை பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். முறையாக பாராமரிக்கப்படாத ஏசிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அதே கட்டிடத்தில் உள்ள பிற ஏசி மெஷின்களையும் தொற்றி பிறருக்கும் நோய்களை பரப்ப வல்லவை. குறிப்பாக, முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் பீடித்துள்ளவர்களை மேலும் பாதிக்கும் என்றும் இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசியில் அதிகம் இருப்பதைவிட வெப்பநிலையில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.
ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாச நோய் உண்டாவதற்கும், மூச்சுத்திணறல், ஜலதோஷம், சளித்தொல்லை, இருமல் போன்றவை பரவுவதற்கும் ஏசிக்கள் காரணமாக இருக்கின்றன என்பதால் நோய்களை தவிர்க்க விரும்புவோர் அடிக்கடி தங்களுடைய ஏசி மெஷின்களை சுத்தப்படுத்தி பாராமரித்து வர வேண்டும்.
அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும் வெளிப்புற வெப்ப நிலையிலும், புல்தரைகளிலும் அதிக நேரத்தை செலவிட முன்வர வேண்டும். அதேபோல் வசிப்பிடங்களில் வெப்பநிலையை சுமார் 20 முதல் 25 டிகிரி செல்ஷியஸூக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 20 டிகிரி செல்ஷியஸூக்கு குறைவான தட்பவெப்பம் பல்வேறு தொற்று நோய்களை கடத்த வல்லவை என்று துபை யூனிவர்ஸல் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஜிம்மி ஜோசப் அவர்களும் புர்ஜீல் மருத்துவமனைளை சார்ந்த டாக்டர் திரிலோக் சந்த் அவர்களும் எச்சரித்துள்ளனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.