தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (23.10.2017) நடைபெற்றது.
டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 1455 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற வேண்டும். குடி தண்ணீரில் குளோரினேசன் கலந்த குடிநீர் வழங்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வீடுவீடாக சென்று ப்ளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் 3 நபர்களுக்கு டெங்கு காய்ச்சலோ அல்லது பத்து நபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அந்த கிராமத்தில் உடனடியாக சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு சாரண சாரணீயர் (என்.எஸ்.எஸ்) மாணவர்களையும், தொண்டு நிறுவனங்களையும், நேரு யுவகேந்திரா இளைஞர்களையும், முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு பாரத் கல்லூரி மாணவர்கள் தானாக முன் வந்து பணியில் ஈடுபட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். அப்பொழுது தான் டெங்கு கொசு புழு உற்பத்தியை தடுக்க முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யசெந்தில்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ), ரவிச்சந்திரன், அனைத்து பேரூராட்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 1455 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற வேண்டும். குடி தண்ணீரில் குளோரினேசன் கலந்த குடிநீர் வழங்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வீடுவீடாக சென்று ப்ளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் 3 நபர்களுக்கு டெங்கு காய்ச்சலோ அல்லது பத்து நபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அந்த கிராமத்தில் உடனடியாக சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு சாரண சாரணீயர் (என்.எஸ்.எஸ்) மாணவர்களையும், தொண்டு நிறுவனங்களையும், நேரு யுவகேந்திரா இளைஞர்களையும், முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு பாரத் கல்லூரி மாணவர்கள் தானாக முன் வந்து பணியில் ஈடுபட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். அப்பொழுது தான் டெங்கு கொசு புழு உற்பத்தியை தடுக்க முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யசெந்தில்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ), ரவிச்சந்திரன், அனைத்து பேரூராட்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.