.

Pages

Monday, October 23, 2017

துபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழுகை நடத்த தடை !

அதிரை நியூஸ்: அக். 23
துபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலை ஓரங்களில் தொழுகை நடத்த தடை விதிப்பு

கடந்த சனிக்கிழமை அன்று மாலை முஹமது பின் ஷேக் ஜாயித் சாலை ஓரத்தில் மஃரிப் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து வந்த வாகனம் மோதியதில் 2 பேர் பலியாயினர் 6 பேர் காயமடைந்தனர் அவர்களின் இருவரின் நிலை இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளது.

இவ்விபத்தை தொடர்ந்து சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு தொழுவதை துபை போலீஸார் தடை செய்துள்ளனர் மாறாக அருகிலுள்ள மஸ்ஜிதுகள் அல்லது பெட்ரோல் பங்குகளில் உள்ள தொழுகைக் கூடங்களில் சென்று தொழுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தடையை மீறுபவர்கள் மீது 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என துபை போக்குவரத்து போலீஸ் பிரிவின் இயக்குனர் பிரிகேடியர் ஸைஃப் முஹைர் அல் மஸ்ரோஹி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த உத்தரவை மீறும் ஓட்டுனர்களின் பஸ் போலீஸால் பிடித்து வைக்கப்படுவதுடன் (Dubai Police said that buses can be impounded if the drivers repeat the offence) ஓட்டுனர்களைப் பற்றிய புகாரையும் அந்தந்த நிறுவனங்களுக்கு தெரிவித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.