துபாய் : துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ஜோ பிரசாந்த் (வயது 25). இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் துபாயில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை பெற முயற்சி செய்தனர். இதனை தெரிந்து கொண்ட கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி. ஷேக், ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசினை தொடர்பு கொண்டார்.
அவர் ஈமான் கலாச்சார மையத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் தெரிவித்தார். அதனையடுத்து ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா அவர்களின் வழிகாட்டுதலுடன் ஜோ பிரசாந்த் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அமீரக அரசு மற்றும் இந்திய துணை தூதரகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உடல் சொந்த ஊருக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் 21.10.2017 அன்று இரவு 11.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் ஈமான் கல்சுரல் செண்டரின் மதம் கடந்த மனித நேயப் பணிகளுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் பெயரில் இறந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் செந்தமிழ் செல்வன், பாபு, உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு அளித்தனர்.
இதனால் இவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை பெற முயற்சி செய்தனர். இதனை தெரிந்து கொண்ட கீழக்கரை கிளாசிபைட் எஸ்.கே.வி. ஷேக், ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசினை தொடர்பு கொண்டார்.
அவர் ஈமான் கலாச்சார மையத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் தெரிவித்தார். அதனையடுத்து ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா அவர்களின் வழிகாட்டுதலுடன் ஜோ பிரசாந்த் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அமீரக அரசு மற்றும் இந்திய துணை தூதரகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உடல் சொந்த ஊருக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் 21.10.2017 அன்று இரவு 11.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.
மேலும் ஈமான் கல்சுரல் செண்டரின் மதம் கடந்த மனித நேயப் பணிகளுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் பெயரில் இறந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் செந்தமிழ் செல்வன், பாபு, உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு அளித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.