அதிராம்பட்டினம், அக். 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதிராம்பட்டினம் பேரூர் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் தெருவில் மேய்ந்து செல்லும் ஆடு, மாடுகள், பிளாஸ்டிக் பைகளில் மிச்சமுள்ள உணவை சாப்பிடும் போது, பிளாஸ்டிக் பைகளை சேர்த்து விழுங்கி விடுவதால்.பெரும் இன்னலுக்கு ஆளாகின்றன. மேலும், சாலைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் சிக்கி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேற வழியின்றி அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஏ. சாகுல் ஹமீது,
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அதிராம்பட்டினம் பேரூர் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் தெருவில் மேய்ந்து செல்லும் ஆடு, மாடுகள், பிளாஸ்டிக் பைகளில் மிச்சமுள்ள உணவை சாப்பிடும் போது, பிளாஸ்டிக் பைகளை சேர்த்து விழுங்கி விடுவதால்.பெரும் இன்னலுக்கு ஆளாகின்றன. மேலும், சாலைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் சிக்கி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேற வழியின்றி அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஏ. சாகுல் ஹமீது,
அதிராம்பட்டினம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.