.

Pages

Sunday, October 22, 2017

அஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற பெண் விமான நிலையத்தில் கைது !

அதிரை நியூஸ்: அக். 22
அஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற பெண் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அஜ்மானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த ஆசியப் பெண் ஒருவர் தனது முதலாளியின் பாதுகாப்பு லாக்கரை உடைத்து அதிலிருந்த 27,000 திர்ஹம் பணம், தங்க நகைகள், ஐபேட் மற்றும் அவருடைய பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.

வீட்டு முதலாளியின் புகாரின் பேரில் உடனடி விசாரனையில் இறங்கிய போலீஸாருக்கு அந்தப் பெண் நாட்டை விட்டுத் தப்புவதற்காக துபை விமான நிலையத்தில் புறப்படும் ஹாலில் (Departure Hall) காத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து துபை போலீஸாரின் உதவியுடன் கைது செய்து பொருட்களை மீட்டனர். புகார் பெறப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் அப்பணிப்பெண் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.