.

Pages

Friday, October 27, 2017

அதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததாக இளைஞர் மீது புகார் (படங்கள்)

பேராவூரணி அக். 26
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சரகம் ( அதிரை அருகே உள்ள ) ரெட்டவயல் பகுதியில் சொகுசு காரில் வந்த ஒரு இளைஞர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று வாகனங்களில் செல்வோரை மிரட்டி (அக்- 25 புதன்கிழமை மாலை) பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ரெட்டவயல் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சற்று நேரத்தில் ரெட்டவயல் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். கடைவீதியில் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட அந்த நபர் மீது சந்தேகமடைந்த இப்பகுதி மக்கள் திரண்டு, அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் தன்னை சிஐடி போலீஸ் எனக்கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார்

அந்த அடையாள அட்டையில், பெயர் நந்தகுமார் எனவும், நாகை மாவட்டம் சிவில் சப்ளை சி.ஐ.டி.,என இருந்துள்ளது. டி.என். 13 C -3876 என்ற சிவப்பு நிற சொகுசு காரில் வந்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொது மக்கள் அந்த நபரை பிடித்து வைத்துக்கொண்டு, பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் அங்கிருந்து காவலர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டுக்கோட்டைக்கு வியாழக்கிழமை (அக் 26)  முதலமைச்சர் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதாகவும், காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்குமாறும், இல்லையேல் விட்டுவிடுமாறும், காவல்நிலையத்தில் கூறினராம். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் விட்டுவிட்டதாகவும், அவர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர் உண்மையிலேயே காவல்துறையை சேர்ந்தவரா ? இல்லை சிவில் சப்ளைஸ் பிரிவு சிஐடியா ? இல்லை போலியான ஆசாமியா ? எனக் கேள்வி எழுந்துள்ளது. உண்மையான காவலராக இருந்தால் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், தஞ்சை மாவட்ட எல்லையில் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது ஏன் ? எனக்கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.