.

Pages

Sunday, October 29, 2017

இருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக். 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம் உஸ்மான் (49). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் ஒரு இடத்தில் 90 சதவீத அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைத்து இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத் தொகை ரூ.1.85 லட்சம் ஆகும் எனவும், காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 60 ஆயிரம் வரை பெறலாம் என தெரிவித்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மீதமுள்ள ரூ.1.25 லட்சம் பணத்தை திரட்ட முடியவில்லை எனக் கூறி  நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக உஸ்மான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

எஸ்.எம் உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : S M USMAN
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 31389479680
IFSC: SBIN0014370



மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9789535498

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.