அதிரை நியூஸ்: அக்.24
நம்ம நாட்ல மாடுகள் உலவாத நெடுஞ்சாலைகள் ஏதுமிருந்தால் அது அதிசயம் ஆனால் அமீரகத்தில் ஒரு காளை நெடுஞ்சாலையில் மிக அதிசயமாக தென்பட்டால் அது வைரல் செய்தி.
ஷார்ஜா கோர்னிச் சாலையில் பறக்கும் போக்குவரத்திற்கு இடையே சாலையின் நடுவே மறியல் போராட்டம் செய்வது போல் கட்டுக்கடங்காமல் காணாமல் போன காளை ஒன்று குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி நின்றனர்.
அந்தக் காளையை இரண்டு விரட்டிச் சென்றதும் அது மிரண்டு ஓடியதும் ஓரே நாளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்த வைரல் வீடியோவாக பரவி வருகிறது.
இதற்கு முன், கடந்த 2017 மார்ச் 8 ஆம் தேதி ஒன்று ஆப்பிரிக்காவின் சவண்ணா சதுப்பு நிலத்தில் வாழும் கொக்கு ஒன்று துபை ஏர்போர்ட் டனலை அடுத்த சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது.
நன்கு பறக்கும் தன்மையுடைய அந்த கொக்கு யாருடைய வளர்ப்பிலிருந்தோ தப்பி வந்ததால் அதனால் பறக்க இயலவில்லை.
அதேபோல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி 2 பெண் மயில்கள் தூசித் தானி ஹோட்டல் (Dusit Thani) அருகே ஷேக் ஜாயித் ரோட்டில் நின்று போக்குவரத்தை சீர்குலைத்தன.
கவனக்குறைவால் தப்பி வரும் அல்லது திறந்து விடப்படும் பிராணிகள் பற்றி அமீரக சட்டம் சொல்வது இது தான், ஓட்டகத்தை ரோட்டில் விட்டால் தலா ஒரு ஒட்டகத்திற்கு 2000 திர்ஹமும் பிற பிராணிகள், பறவைகள் மீதும் தலா 500 திர்ஹம் அபராதமான அதன் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
நம்ம நாட்ல மாடுகள் உலவாத நெடுஞ்சாலைகள் ஏதுமிருந்தால் அது அதிசயம் ஆனால் அமீரகத்தில் ஒரு காளை நெடுஞ்சாலையில் மிக அதிசயமாக தென்பட்டால் அது வைரல் செய்தி.
ஷார்ஜா கோர்னிச் சாலையில் பறக்கும் போக்குவரத்திற்கு இடையே சாலையின் நடுவே மறியல் போராட்டம் செய்வது போல் கட்டுக்கடங்காமல் காணாமல் போன காளை ஒன்று குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி நின்றனர்.
அந்தக் காளையை இரண்டு விரட்டிச் சென்றதும் அது மிரண்டு ஓடியதும் ஓரே நாளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்த வைரல் வீடியோவாக பரவி வருகிறது.
இதற்கு முன், கடந்த 2017 மார்ச் 8 ஆம் தேதி ஒன்று ஆப்பிரிக்காவின் சவண்ணா சதுப்பு நிலத்தில் வாழும் கொக்கு ஒன்று துபை ஏர்போர்ட் டனலை அடுத்த சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது.
நன்கு பறக்கும் தன்மையுடைய அந்த கொக்கு யாருடைய வளர்ப்பிலிருந்தோ தப்பி வந்ததால் அதனால் பறக்க இயலவில்லை.
அதேபோல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி 2 பெண் மயில்கள் தூசித் தானி ஹோட்டல் (Dusit Thani) அருகே ஷேக் ஜாயித் ரோட்டில் நின்று போக்குவரத்தை சீர்குலைத்தன.
கவனக்குறைவால் தப்பி வரும் அல்லது திறந்து விடப்படும் பிராணிகள் பற்றி அமீரக சட்டம் சொல்வது இது தான், ஓட்டகத்தை ரோட்டில் விட்டால் தலா ஒரு ஒட்டகத்திற்கு 2000 திர்ஹமும் பிற பிராணிகள், பறவைகள் மீதும் தலா 500 திர்ஹம் அபராதமான அதன் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.