.

Pages

Sunday, October 29, 2017

சவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய பணிப்பெண் !

அதிரை நியூஸ்: அக். 29
17 ஆண்டுகளுக்குப் பின் சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பணிப்பெண் நாடு திரும்பினார்.

இலங்கையிலிருந்து 2000 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு குசுமாவதி என்ற சிங்களப் பெண் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். சென்றவருக்கு ஆள் அரவமற்ற பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணி வழங்கப்பட அதையே தொடர்ந்து 15 ஆண்டுகளாக செய்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை உறவினர்களிடமிருந்து முற்றிலுமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார், காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் இலங்கை உறவினர்கள் அவர்களின் அரசுக்கு கண்டுபிடித்து மீட்டுத்தரும்படி கோரிக்கை எழுப்ப, இலங்கை தூதரகம் சவுதி அதிகாரிகளின் துணையுடன் அப்பெண்ணை அவரது முதலாளியிடமிருந்து மீட்டு நாட்டுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பள நிலுவையாக 3.6 மில்லியன் இலங்கை ரூபாய்களும் கிடைத்தது.

ஒருபுறம் ஆடு, ஓட்டகங்கள் மேய்ப்பதற்காக ஒரு பெண்ணை 17 வருடங்கள் நாட்டுக்கு அனுப்பாத முதலாளியின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில், அந்தப் பெண் விருப்பப்பட்டுத் தான் 15 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு செல்வதற்கு முன் ஒருபோதும் தான் இலங்கைக்கு திரும்புவது குறித்து உறவினர்களிடம் புகார் சொன்னதே இல்லை என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர். இருபுறம் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தது ஊர்ஜிதமானால் கண்டிப்பாக சவுதி முதலாளி தண்டிக்கப்பட வேண்டும் என சொல்வோரும் உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. துபையில் 2 .0 ஆடியோ ரிலீஸ் ஆனதாமே அதனைப்பற்றி நம்மவூரான் எதுவும் எழுதலே., என்னமோ போங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.