அதிரை நியூஸ்: அக். 28
குவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ செலவினk கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வாழும் வெளிநாட்டினர் மீதான மருத்துவ கட்டணங்களை குவைத் சுகாதாரத்துறை ஏற்றியதுடன் நடப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் குவைத் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடியதை தொடர்ந்து இந்த விலையேற்றம் அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அக்டோபர் 25 ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குவைத் சுகாதாரத் துறையின் வாதத்தை ஏற்று வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மருத்துவ கட்டணங்களின் விலையேற்றம் செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை ஒருபுறம், மற்றொரு புறம் வெளிநாட்டினர் தங்களின் உறவினர்களை குவைத்தில் சிகிச்சை எடுப்பதற்காகவே அழைத்து வருவதன் வழியாக குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குவைத்தியர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதாக ஒரு சில எம்.பிக்கள் குரல் எழுப்பியிருந்தனர்.
இன்னும் சில எம்.பிக்கள் குறைந்த வருவாய் பெறும் ஊழியர்களின் நலனுக்காக மருத்துவ கட்டணங்களை ஏற்றுவதை சில மாதங்களுக்காவது தள்ளிப்போட வேண்டும் எனவும் ஆதரவு குரல் எழுப்பியிருந்ததுடன் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் போதிய மாற்றங்களை மேற்கொண்டு வெளிநாட்டினரும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.
விசா ரினீவலின் போது ஸ்பான்சர்களே இன்ஷூரன்ஸூக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என வலீத் அல் தப்தபை கேட்டுக் கொண்டுள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ செலவினk கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வாழும் வெளிநாட்டினர் மீதான மருத்துவ கட்டணங்களை குவைத் சுகாதாரத்துறை ஏற்றியதுடன் நடப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் குவைத் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடியதை தொடர்ந்து இந்த விலையேற்றம் அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அக்டோபர் 25 ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குவைத் சுகாதாரத் துறையின் வாதத்தை ஏற்று வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மருத்துவ கட்டணங்களின் விலையேற்றம் செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை ஒருபுறம், மற்றொரு புறம் வெளிநாட்டினர் தங்களின் உறவினர்களை குவைத்தில் சிகிச்சை எடுப்பதற்காகவே அழைத்து வருவதன் வழியாக குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குவைத்தியர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதாக ஒரு சில எம்.பிக்கள் குரல் எழுப்பியிருந்தனர்.
இன்னும் சில எம்.பிக்கள் குறைந்த வருவாய் பெறும் ஊழியர்களின் நலனுக்காக மருத்துவ கட்டணங்களை ஏற்றுவதை சில மாதங்களுக்காவது தள்ளிப்போட வேண்டும் எனவும் ஆதரவு குரல் எழுப்பியிருந்ததுடன் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் போதிய மாற்றங்களை மேற்கொண்டு வெளிநாட்டினரும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.
விசா ரினீவலின் போது ஸ்பான்சர்களே இன்ஷூரன்ஸூக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என வலீத் அல் தப்தபை கேட்டுக் கொண்டுள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.