அதிரை நியூஸ்: அக். 27
துபை மெட்ரோ சேவையின் தினசரி ஆரம்ப நேரம் வரும் நவம்பர் 1ந் தேதி முதல் நீட்டிக்கப்பட உள்ளது.
துபையில் ரெட் லைன் கிரீன் லைன் என இருதடங்களில் மெட்ரோ சேவைகள் நடைபெறுகின்றன. துபையின் வெற்றிப்பெற்ற போக்குவரத்துத் திட்டங்களில் மெட்ரோ முதன்மையானது. பயணிகளின் விருப்பத்தை தொடர்ந்து இந்த மெட்ரோ சேவை நேரங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரெட் லைனில் தினசரி சனிக்கிழமை முதல் புதன் வரை அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக அதிகாலை 5 மணிக்கே சேவை துவங்கும். அதேபோல் கிரீன் லைனில் அதிகாலை 5.50 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு துவங்கும். இரண்டு தடங்களில் தினசரி சேவை நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும்.
வியாழக்கிழமைகளில் (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை சேவை நீடிக்கும். 2 தடங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு துவங்கும் சேவை (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை நீடிக்கும்.
தினசரி துபை டிராம் சேவை அதிகாலை 6.30 மணிக்கு பதிலாக அதிகாலை 6 மணிக்கே துவங்கி (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை இயங்கும்.
வேலைக்கு போகும் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ஸ்டேஷன்களாக கண்டறியப்பட்டுள்ள ராஷிதியா, ரிக்கா, எமிரேட்ஸ் டவர், பஸ்ட் கல்ஃப் பேங்க், ஜூமைரா லேக் டவர்ஸ் மற்றும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் ஆகிய 6 மெட்ரோ நிலையங்களிலிருந்து காலை 5 மணிக்கே எக்ஸ்பிரஸ் மெட்ரோக்கள் இயக்கப்படும்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
துபை மெட்ரோ சேவையின் தினசரி ஆரம்ப நேரம் வரும் நவம்பர் 1ந் தேதி முதல் நீட்டிக்கப்பட உள்ளது.
துபையில் ரெட் லைன் கிரீன் லைன் என இருதடங்களில் மெட்ரோ சேவைகள் நடைபெறுகின்றன. துபையின் வெற்றிப்பெற்ற போக்குவரத்துத் திட்டங்களில் மெட்ரோ முதன்மையானது. பயணிகளின் விருப்பத்தை தொடர்ந்து இந்த மெட்ரோ சேவை நேரங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரெட் லைனில் தினசரி சனிக்கிழமை முதல் புதன் வரை அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக அதிகாலை 5 மணிக்கே சேவை துவங்கும். அதேபோல் கிரீன் லைனில் அதிகாலை 5.50 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு துவங்கும். இரண்டு தடங்களில் தினசரி சேவை நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும்.
வியாழக்கிழமைகளில் (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை சேவை நீடிக்கும். 2 தடங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு துவங்கும் சேவை (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை நீடிக்கும்.
தினசரி துபை டிராம் சேவை அதிகாலை 6.30 மணிக்கு பதிலாக அதிகாலை 6 மணிக்கே துவங்கி (அடுத்த நாள்) நள்ளிரவு 1 மணிவரை இயங்கும்.
வேலைக்கு போகும் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ஸ்டேஷன்களாக கண்டறியப்பட்டுள்ள ராஷிதியா, ரிக்கா, எமிரேட்ஸ் டவர், பஸ்ட் கல்ஃப் பேங்க், ஜூமைரா லேக் டவர்ஸ் மற்றும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் ஆகிய 6 மெட்ரோ நிலையங்களிலிருந்து காலை 5 மணிக்கே எக்ஸ்பிரஸ் மெட்ரோக்கள் இயக்கப்படும்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.