அதிரை நியூஸ்: அக். 29
குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
குவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அல் ஜெரீதா பத்திரிக்கையில் வெளியான செய்தியை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் உறுதி செய்தார்.
சட்டம் எண் 169இன் படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் ஜிப்ரா கிராஸிங், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்கள், போக்குவரத்திற்கு தடையாக மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தினால் 2 மாதம் வாகனத்தை பிடித்து வைக்கப்படும். மேலும் வாகனத்தை எடுத்துச் செல்லும் ரெக்கவரி வாடகை 10 குவைத் தினாருடன் நாளொன்றுக்கு 1 குவைத் தினார் என அபராதமும் வசூலிக்கப்படும்.
சட்டம் எண் 209இன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதியளிக்கின்றது. சட்டம் எண்கள் 208 மற்றும் 210இன் படி, தடுத்து வைப்பதற்காக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் சேதங்கள் ஏற்பட்டால் போக்குவரத்து துறை பொறுப்பேற்காது.
அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால், சீட் பெல்ட் அணியாமல் சென்றாலும் 2 மாதம் வாகனம் முடக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Source: Msn / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
குவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அல் ஜெரீதா பத்திரிக்கையில் வெளியான செய்தியை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் உறுதி செய்தார்.
சட்டம் எண் 169இன் படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் ஜிப்ரா கிராஸிங், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்கள், போக்குவரத்திற்கு தடையாக மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தினால் 2 மாதம் வாகனத்தை பிடித்து வைக்கப்படும். மேலும் வாகனத்தை எடுத்துச் செல்லும் ரெக்கவரி வாடகை 10 குவைத் தினாருடன் நாளொன்றுக்கு 1 குவைத் தினார் என அபராதமும் வசூலிக்கப்படும்.
சட்டம் எண் 209இன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதியளிக்கின்றது. சட்டம் எண்கள் 208 மற்றும் 210இன் படி, தடுத்து வைப்பதற்காக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் சேதங்கள் ஏற்பட்டால் போக்குவரத்து துறை பொறுப்பேற்காது.
அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால், சீட் பெல்ட் அணியாமல் சென்றாலும் 2 மாதம் வாகனம் முடக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Source: Msn / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.