.

Pages

Wednesday, October 25, 2017

சவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளாதார மண்டலம் !

அதிரை நியூஸ்: அக்.25
சவுதியில் செங்கடல் கரையோரம் 'NEOM' என்ற பெயரில் புதிய பொருளாதார மண்டலத்தை SoftBank Group Corp என்ற வங்கியின் உதவியுடன் சவுதி அரசின் முழுமையான செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனினும் சவுதி அரேபியாவின் நடப்பு சட்டதிட்டங்களுக்குள் அமையாமல் தனக்கெனதொரு தனிச்சட்டங்களையும், தற்போதைய சவுதியின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்ட நவீன போக்கையும் கொண்டிருக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் சமீபத்திய அனுமதிகளான மேடை இன்னிசைக் கச்சேரிகள், சினிமா தியேட்டர் அனுமதிகள், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி போன்றவற்றின் தொடர்ச்சியாகவே இப்புதிய பொருளாதார நகரம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபையின் ஜெபல் அலி பொருளாதார மண்டலத்தை முன்மாதிரியாக கொண்டு அமையவுள்ள இந்த நகரத்தில் 9 முக்கிய தொழில்துறைகளான ஆற்றல் மற்றும் நீர், இயக்கம், உணவு, உயிரியல், தொழிற்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அறிவியல், மேம்பட்ட உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக எகிப்துடன் இணைக்கும் வகையில் செங்கடல் மேல் பாலம் ஒன்று கட்டப்படும். மேலும் சவுதி, எகிப்து மற்றும் ஜோர்டானின் பொருளாதார மண்டலங்களுடன் இணைக்கபடுவதன் மூலம் 3 நாடுகளில் செயல்படும் உலகின் முதலாவது பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும்.

அவசியம் படியுங்கள்:
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழ்)

https://drive.google.com/file/d/0B9cfNuo6m3ACRWxyTFhfUkQ1eWM/view?usp=sharing

The Confessions of an economic hitman (English)

http://library.uniteddiversity.coop/Money_and_Economics/confessions_of_an_economic_hitman.pdf

யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை (தமிழ்)

https://drive.google.com/file/d/0B6D1YyySEVmLZlpMekg3VlJxeGc/view

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.