.

Pages

Tuesday, October 31, 2017

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.10.2017) தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

“இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்.  சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.” இவ்வாறு உறுதிமொழியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி, நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல்,  பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செந்தாமரை (பொது), கணேசன் (கணக்கு), சித்ரா, (ஊரக வளர்ச்சி), ஜனனி சௌந்தர்யா (நிலம்), மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.