.

Pages

Friday, October 20, 2017

அதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய்மைப் பணிகள் ஆய்வு !

அதிராம்பட்டினம், அக்.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கழிவு நீர் வடிகால் தூய்மைப்பணிகளை பேரூராட்சி உதவி இயக்குநர் இளங்கோவன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி காந்தி நகர் பகுதியில் உள்ள, கழிவு நீர் வடிகால் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு, தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகளை, பேரூராட்சி உதவி இயக்குநர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ், உதவி அலுவலர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வெங்கடேஷ், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.