.

Pages

Monday, October 30, 2017

தஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.10.2017) நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் திருவாரூரிலிந்து தஞ்சையை நோக்கி வந்த தனியார் ஈஸ்வரி பேருந்தும், தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும் (சி.ஆர்.சி) நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டு ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்தனர்.  மேலும் 47 பேர் காயமடைந்து  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  ஆகியோர் நேரில் பார்வையிட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமாரிடம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தேவைப்படும் நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கவும், இரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய ரத்தம் வழங்கிடவும் மருத்துவர்களை அறிவுறுத்தினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண நலம் பெற வேண்டும் என ஆறுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கூறினார்.

பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மருத்துவரிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

முன்னதாக அம்மாப்பேட்டை பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  நேரில் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.