.

Pages

Tuesday, October 24, 2017

குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் !

அதிரை நியூஸ்: அக்.24
குவைத்தில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கவும் போக்குவரத்து விதிகளில் கடும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் அறிவித்துள்ளார்.

அல் சல்மியா பகுதியில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு போக்குவரத்து சட்டங்களை மீறும் ஓட்டுனர்கள் வரவழைக்கப்பட்டு அதிவேகமாக சென்று ரேடார் கேமிராவில் சிக்கியவர்களின் கார்கள், சாலை ஓரங்கள், நடைபாதை மற்றும் போக்குவரத்திற்கு இடஞ்சலாக வண்டியை நிறுத்துவோர்களுடைய வாகனங்கள் என 2 மாதங்களுக்கு போலீஸ் கஸ்டடியில் மறித்து வைக்கப்படும்.

அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களின் வாகனங்களும் 2 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படும்.

சிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்லுதல், பொறுப்பற்ற முறையில் தறிகெட்டு வண்டியை ஓட்டுதல், சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் மற்றும் முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் குவைத் பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் அதேவேளை வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.