.

Pages

Monday, October 23, 2017

மக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்தொகை ரத்து !

அதிரை நியூஸ்: அக். 23
மக்காவில் நடைபெற்ற கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்தொகை கிடையாது

கடந்த 2015 ஆம் ஆண்டு புனிதமிகு மக்காவின் ஹரம் ஷரீஃப் மஸ்ஜிதின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் சாய்ந்ததில் சுமார் 108 பேர் மரணமடைந்தனர். 238 பேர் காயமடைந்தனர். அப்போது இச்சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மன்னர் சல்மான் இறந்தவர்களுக்கு தலா 1 மில்லியன் ரியால்கள் மற்றும் நிரந்தர ஊனமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரியால்களையும் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டிருந்தார்.

மன்னரின் நல்லெண்ண நஷ்டயீட்டிற்கு மேலதிகமாக திய்யா (diyyah)  எனப்படும் இரத்த ஈட்டுத்தொகை (blood money) குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்களுக்காகவோ காயமடைந்தவர்களுக்காகவோ எத்தகைய இரத்த ஈட்டுத்தொயையும் கட்டுமான ஒப்பந்த நிறுவனமான பின்லாடின் குரூப் தர வேண்டியதில்லை என நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்குமுன் தொழில்நுட்பம், பொறியியல், இயந்திரவியல், புவியியக்கவியல் அறிக்கைகளுடன் சவுதி வானிலை மையத்தின் முன்னறிப்புக்கள் என அனைத்தும் கவனமாக பரிசீலிக்கப்பட்டதின் அடிப்படையில் கிரேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் எத்தகைய விதிமீறலும் காணப்படவில்லை மேலும் அந்தக் கிரேன் அவ்விடத்திலேயே முன்அனுமதியின் பேரில் 2 ஆண்டுகளாக அங்கேயே கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததையும் கருத்திற்கொண்டு இது இயற்கை சீற்றத்தால் நடந்த விபத்து என இத்தீர்ப்பினை வாசிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.

எனினும், அன்று பணியிலிருந்த 13 கிரேன் ஆப்பரேட்டர்களையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளதை மேல் முறையீடு செய்யப்போவதாக பின்லாடின் நிறுவனம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.