நாகர்கோவிலை சேர்ந்தவர் சையது அலி ( வயது 51 ). இவர் துபாயில் உள்ள ஜீனத் பேப்பர் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வரும் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
சமீபத்தில் ரன் தி டிராக் என்ற ஓட்டப் போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியானது 3, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய பலர் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர்.
இதில் தமிழக வீரர் சையது அலி கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார்.
அவர் கோப்பை, பதக்கம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பரிசு பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து சையது அலி கூறியதாவது, இந்த பரிசினை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் தொடர்ந்து ஓட்டப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் உடலும்,மனதும் மிகவும் நலமாக இருக்கிறது. எனவே இங்கு வேலை செய்பவர்கள் தங்களது உடல் நலனை சிறப்பாக வைத்துக் கொள்ளும் பொருட்டு உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
உள்ளூர் செய்திகளை விட வெளிநாடு செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது " உள்ளூவர் செய்திகள் உடக்குடன் " எப்படி பொருந்தும் .
ReplyDelete