.

Pages

Saturday, October 28, 2017

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

தஞ்சாவூர், அக். 28
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்,  காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ண சாமி வாண்டையார், திமுக மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், தஞ்சை மாநகர செயலர் நீலமேகம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

1 comment:

  1. அரசியல் தலைவர்கள் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை உதாரணமா... அம்மையார் அப்போலோவில் இருந்தார் அதே நேரம் கலைஞர் இன்னொரு தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார்., அரசு தலைமையே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாதபோது இவர்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?? கேள்வி சரிதானே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.