தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை தொடக்கம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக ~ மமக மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். இதில், கிளைத் தலைவராக என். அசாருதீன், பொறுப்பாளர்களாக எம். முகமது அலி, ஏ.நவுஷத் இர்ஷாத், அல்லா பிச்சை, முனாசிர், ரிபாய்தீன், சாருக்கான் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், மமக மாவட்டச் செயலர் ஜபருல்லா, தமுமுக மாவட்ட துணைச்செயலர் சேக்காதி, சமூக நீதி மாணவர் இயக்க மாவட்டச் செயலர் முகமது மீராஷா உள்ளிட்ட தமுமுக, மமகவினர் 30 பேர் கலந்துகொண்டனர்.
ஒருவர் தலையிலாவது தொப்பி காணோம் .,சமுதாய காவலர்கள் தொண்டாற்ற வாழ்த்துவோம்
ReplyDelete