.

Pages

Saturday, October 28, 2017

மந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்கம் (படங்கள்)

பேராவூரணி, அக்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை தொடக்கம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமுமுக ~ மமக மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். இதில், கிளைத் தலைவராக என். அசாருதீன், பொறுப்பாளர்களாக எம். முகமது அலி, ஏ.நவுஷத் இர்ஷாத், அல்லா பிச்சை, முனாசிர், ரிபாய்தீன், சாருக்கான்  ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், மமக மாவட்டச் செயலர் ஜபருல்லா, தமுமுக மாவட்ட துணைச்செயலர் சேக்காதி, சமூக நீதி மாணவர் இயக்க மாவட்டச் செயலர் முகமது மீராஷா உள்ளிட்ட தமுமுக, மமகவினர் 30 பேர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. ஒருவர் தலையிலாவது தொப்பி காணோம் .,சமுதாய காவலர்கள் தொண்டாற்ற வாழ்த்துவோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.