.

Pages

Wednesday, October 25, 2017

அமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமல் !

அதிரை நியூஸ்: அக். 25
கடந்த ஜூன் மாதம் சில அரபுநாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களில் லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு பின்பு ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது எனினும் 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள உலகின் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் முடிவுற்ற நிலையில் நாளை (26.10.2017 வியாழன்) முதல் மீண்டும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை ஆரம்பம் செய்யவுள்ளது அமெரிக்கா. அனைத்து பயணிகளும் தற்போது நடைமுறையில் உள்ள 60 நிமிடங்களுக்குப் பதில் 90 நிமிடங்களுக்கு முன்பே பாதுகாப்பு சோதனைக் கடமைகளை நிறைவு செய்தல், பயணிகளை ஸ்கேன் செய்தல் மற்றும் சிறு விசாரணைகள் ஆகியவை அவற்றில் சில.

இந்தப் புதிய பாதுகாப்பு நடைமுறைகளால் தினந்தோறும் 105 உலக நாடுகளிலுள்ள 280 விமான நிலையங்கள் வழியாக 180 விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 2000 பயணிகள் விமானங்கள் வழியாக அமெரிக்காவிற்குள் வரும் சுமார் 325,000 பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.