.

Pages

Sunday, October 29, 2017

4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போலீஸ் (வீடியோ)

அதிரை நியூஸ்: அக். 29
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் தமிழக வீதியெங்கும் பெருகிவிட்ட யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர் பற்றிய செய்திகளையே படித்து விரக்தியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் நமக்கு ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசம் பற்றிய ஆறுதல் செய்தி இது.

ஒரு சிறுவனு,ம் அவனுடைய தங்கையும் விளையாடிக் கொண்டிருக்கையில் விளையாட்டாக சிறுவன் தன் தங்கையிடம், உன்னை போலீஸ் பிடித்துக் கொண்டு போகக்போகிறார்கள் என பயமுறுத்த, நிஜமாக போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என பயந்த சிறுமி ஹனான் நள்ளிரவில் கூட தூக்கம் வராமல் கடந்த ஒரு வாரமாக அழுது புலம்பியிருக்கிறாள், செய்தி துபை போலீஸாருக்கு சொல்லப்பட்டது.

சிறுமி பயந்தது போலவே தன்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்ததை கண்டு இன்னும் அரண்டுபோக, சிறுமியை தேற்றிய போலீஸார் தாங்கள் கெட்டவர்களை மட்டுமே பிடிப்போம் உன்னைப் போன்ற நல்லப்பிள்ளைகளை அல்ல என்று கூறியதுடன் தங்களுடைய விலையுயர்ந்த போலீஸ் வாகனத்திலேயே சிறுமி ஹனானை ஏற்றி ஊரைச்சுற்றி வந்ததுடன் கைநிறைய பரிசுகளையும் வழங்க சிறுமி ஹனானுக்கு தற்போது போலீஸ் என்ற பயமே அகராதியிலிருந்து அழிந்து போனது.

துபை போலீஸார், எங்களுடைய பணி கைது செய்வதும் போக்குவரத்து அபராதங்கள் விதிப்பது மட்டுமல்ல மனிதநேயமும் தான் என்று தங்களுடைய காலரை பெருமையுடன் தூக்கிவிட்டு கொள்கிறார்கள். துபை போலீஸ் வெளியிட்ட அந்த வீடியோவைத் தான் பாருங்களேன்!

https://www.facebook.com/dubaipolicehq.en/videos/1506265049451025/

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.