தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 2012-2013 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து, மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதியில் குளத்தை புனரமைக்கும் பணிகள் நடந்தது.
பல ஆண்டுகளாக குப்பைக் கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவு காலம் பிறந்ததைக் கண்டு இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்த நிலையில், குளத்தை புனரமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல், அவற்றில் சிலவற்றை கிடப்பில் போட்டதால், அதிருப்தி அடைந்தனர். இதன்பின்னர், கீழத்தெரு ஜமாத்தினர், கடந்த 2014 ஆம் ஆண்டு, குளத்தின் மீதமுள்ள பணிகளை முடித்துதரக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையால், குளத்தின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வடிகாலில் கழிவு நீர் வெளியேறி குளத்தில் கலந்து துர் நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக குளத்தை முறையாக பராமரிக்காததால் குளத்தை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.
குளத்தையொட்டி அமைந்துள்ள வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் குளத்தின் ஓரத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் ஆகியன குளத்தினுள் புகாதவாறும், குளத்திற்கு நீர் ஆதரமாக இருக்கும் செடியன் குளம் வாய்க்காலை முறையாக தூர்வாரவும், குளத்தின் விடுபட்ட இதர பணிகளை விரைந்து முடித்துதரவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஜீம் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.