அதிரை நியூஸ்: ஏப்.05
பீஹார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம் ராம்நகர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முஹமது ரசூல் என்ற இறைச்சிக்கடைகாரர். இவர் கடையை அடைத்துவிட்டு வரும் போது 4 பேர் துப்பாக்கிமுனையில் வழிமறித்து அவரிடமிருந்த 186 இந்திய ரூபாய் (தற்போதைய நிலவரப்படி 10.5 திர்ஹம்) மற்றும் கைக்கடிகாரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இறைச்சிக்கடைகாரரும் இந்த வழிப்பறி கொள்ளை பற்றி நவ்தன் நகர போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார், இந்த சம்பவம் நடைபெற்றது 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி.
போலீஸ் விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பாரஸ் ரவூத் என்பவரும் ஒருவர், இவரது வழக்கு தனியாக விசாரிக்கப்பட மற்ற 3 பேரின் வழக்கும் தனியாக விசாரிக்கப்பட்டது, இன்னும் விசாரிக்கப்படவும் உள்ளது. இதில் பாரஸ் ரவூத் என்பவரை வழக்குத் தொடுத்தவரால் சரியாக அடையாளம் கட்ட முடியாததால் வழக்கு தனியாக நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 13,505 நாட்கள் அதாவது 37 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் கடைசியாக நேற்று நீதிமன்றம், போலீஸார் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கிலிருந்து பாரஸ் ரவூத்தை விடுதலை செய்கின்றேன் என வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு (?) தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பு விடுதலையான ரவூத்திற்கு மட்டுமல்ல 186 ரூபாயை பறிகொடுத்த கறிக்கடைக்காரருக்கும் சேர்த்தே நிம்மதியை கொண்டு வந்திருக்கும். எனினும், இன்னும் 3 பேருடைய தனி வழக்கு எப்போது முடியும் என்பதும் தெரியவில்லை.
186 ரூபாய்காக கடந்த 37 வருடங்களாக, பணத்தை பறிகொடுத்தவர் இதுவரை எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் , வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள், வக்கீல்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள், மின்சாரம் உள்ளிட்ட கோர்ட் செலவுகள், நீதிபதி சம்பளம், போலீஸ் சம்பளம் என எவ்வளவு ஆகியிருக்கும்? இந்த வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் தான் அல்லது இல்லை என்று அன்றோ அல்லது அடுத்த நாளோ போலீஸார் பஞ்சாயத்து பண்ணி நால்வரிடமிருந்து பணத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு வெட்டிச் செலவுகளும் தடுக்கப்பட்டிருக்குமே!
அதிகாரபூர்வ அரசு புள்ளிவிபரங்களின்படி, பீஹார் மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 1.67 மில்லியன் வழக்குகளும், தலைநகர் பட்னா உயர்நீதி மன்றத்தில் 1.45 மில்லியன் வழக்குகளும் இதுபோல் தேங்கிக் கிடக்கின்றதாம். இதில் 16.65 சதவிகித வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 30.12 சதவிகித வழக்குகள் சுமார் 2 வருடங்களாகவும் தேங்கிக் கிடக்கின்றனவாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
பீஹார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டம் ராம்நகர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முஹமது ரசூல் என்ற இறைச்சிக்கடைகாரர். இவர் கடையை அடைத்துவிட்டு வரும் போது 4 பேர் துப்பாக்கிமுனையில் வழிமறித்து அவரிடமிருந்த 186 இந்திய ரூபாய் (தற்போதைய நிலவரப்படி 10.5 திர்ஹம்) மற்றும் கைக்கடிகாரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இறைச்சிக்கடைகாரரும் இந்த வழிப்பறி கொள்ளை பற்றி நவ்தன் நகர போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார், இந்த சம்பவம் நடைபெற்றது 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி.
போலீஸ் விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பாரஸ் ரவூத் என்பவரும் ஒருவர், இவரது வழக்கு தனியாக விசாரிக்கப்பட மற்ற 3 பேரின் வழக்கும் தனியாக விசாரிக்கப்பட்டது, இன்னும் விசாரிக்கப்படவும் உள்ளது. இதில் பாரஸ் ரவூத் என்பவரை வழக்குத் தொடுத்தவரால் சரியாக அடையாளம் கட்ட முடியாததால் வழக்கு தனியாக நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 13,505 நாட்கள் அதாவது 37 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் கடைசியாக நேற்று நீதிமன்றம், போலீஸார் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கிலிருந்து பாரஸ் ரவூத்தை விடுதலை செய்கின்றேன் என வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு (?) தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பு விடுதலையான ரவூத்திற்கு மட்டுமல்ல 186 ரூபாயை பறிகொடுத்த கறிக்கடைக்காரருக்கும் சேர்த்தே நிம்மதியை கொண்டு வந்திருக்கும். எனினும், இன்னும் 3 பேருடைய தனி வழக்கு எப்போது முடியும் என்பதும் தெரியவில்லை.
186 ரூபாய்காக கடந்த 37 வருடங்களாக, பணத்தை பறிகொடுத்தவர் இதுவரை எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் , வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள், வக்கீல்கள் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள், மின்சாரம் உள்ளிட்ட கோர்ட் செலவுகள், நீதிபதி சம்பளம், போலீஸ் சம்பளம் என எவ்வளவு ஆகியிருக்கும்? இந்த வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் தான் அல்லது இல்லை என்று அன்றோ அல்லது அடுத்த நாளோ போலீஸார் பஞ்சாயத்து பண்ணி நால்வரிடமிருந்து பணத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு வெட்டிச் செலவுகளும் தடுக்கப்பட்டிருக்குமே!
அதிகாரபூர்வ அரசு புள்ளிவிபரங்களின்படி, பீஹார் மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 1.67 மில்லியன் வழக்குகளும், தலைநகர் பட்னா உயர்நீதி மன்றத்தில் 1.45 மில்லியன் வழக்குகளும் இதுபோல் தேங்கிக் கிடக்கின்றதாம். இதில் 16.65 சதவிகித வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 30.12 சதவிகித வழக்குகள் சுமார் 2 வருடங்களாகவும் தேங்கிக் கிடக்கின்றனவாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.