.

Pages

Wednesday, July 25, 2018

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு குவியும் பாராட்டு!

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் அப்சர் ரிஜ்வான், சுபைத்
அதிராம்பட்டினம், ஜூலை 25
அதிராம்பட்டினத்தில் உள்ள இந்திய வங்கி ஏடிஎம் மிஷினில் இருந்த ரூ. 45 ஆயிரத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மாணவர்களை போலீசார் உட்பட அனைவரும் பாராட்டினர்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவரது மகன் அப்சர் ரிஜ்வான். இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவரது நண்பர் சுபைத் உடன் இந்தியன் வங்கி ஏடிஎம் மிஷினில் பணம் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அப்சர் முயன்றார். அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் இடத்தில் ரூ.45 ஆயிரம் இருந்தது. இதையடுத்து, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையம் சென்று ஏட்டு பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, இந்தியன் வங்கி மேலாளர் ராஜசேகரிடம் இதுகுறித்து நடத்திய விசாரணையில், அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவர் கடந்த ஜூலை 23 ந் தேதி இந்தியன் வங்கி ஏடிஎம் மிஷினில் ரூ.45 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்ததாவும், ஆனால் இதுவரையில் தனது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க வில்லை என தெரிவித்தார். இதன் பின்னர், நடத்திய விசாரணையில் இளங்கோ தான் பணத்தை டெபாசிட் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் ராஜசேகர் பணத்தை இளங்கோவிடம் ஒப்படைத்தார்.

மேலும், பணத்தை பத்திரமாக காவல்துறையிடம் ஒப்படைத்த இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அப்சர் ரிஜ்வான், சுபைத் ஆகியோரின் நேர்மையை, வங்கி மேலாளர் ராஜசேகர், அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

4 comments:

  1. இந்த மாணவர்களின் பெற்றோர்கள்
    பள்ளியின் ஆசிரியை,ஆசிரியர்கள்
    நல்ல ஒழுக்க முல்ல அரபிக் ஆசிரியர்கள் இவர்கள் கட்டிக்கொடுத்த நல் வழியில் வந்த மாணவர்களை என் உள்ளம் குளிர வாழ்த்துகின்றேன்.

    பள்ளியின் பெயர் இமாம் ஷாஃபி அல்லவா

    ReplyDelete
  2. இந்த நற் செயலுக்காக பெற்றோரையும் பிள்ளைகளையும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.