.

Pages

Friday, May 23, 2014

அரசு இணையதளங்களில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !



தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.

வழக்கமான நேரத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டு 45 நிமிஷங்கள் முன்கூட்டியே (காலை 9.15 மணிக்கு) தேர்வுகள் தொடங்கின.

எஸ்.எம்.எஸ்.: 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு.

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in


www.dge2.tn.nic.in


www.dge3.tn.nic.in


என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணை மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமணி

1 comment:

  1. பகல் 12.00 வரைக்கும் தெருவெல்லாம் அமைதியா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.